முகப்பு |
வரு மழை கரந்த |
76. பாலை |
வருமழை கரந்த வால் நிற விசும்பின் |
||
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு |
||
ஆல நீழல் அசைவு நீக்கி, |
||
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ, |
||
5 |
வருந்தாது ஏகுமதி-வால் இழைக் குறுமகள்!- |
|
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை |
||
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் |
||
கானல் வார் மணல் மரீஇ, |
||
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே! | உரை | |
புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத் தலைவிக்கு உரைத்தது.-அம்மூவனார்
|