முகப்பு |
வரையா நயவினர் |
329. பாலை |
வரையா நயவினர் நிரையம் பேணார், |
||
கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன் |
||
இடு முடை மருங்கில், தொடும் இடம் பெறாஅது, |
||
புனிற்று நிரை கதித்த, பொறிய முது பாறு |
||
5 |
இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி |
|
செங் கணைச் செறித்த வன்கண் ஆடவர் |
||
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும், |
||
அத்தம் இறந்தனர் ஆயினும், நத் துறந்து |
||
அல்கலர் வாழி-தோழி!-உதுக் காண்: |
||
10 |
இரு விசும்பு அதிர மின்னி, |
|
கருவி மா மழை கடல் முகந்தனவே! | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தது.-மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
|