முகப்பு |
வறம் கொல வீந்த |
238. முல்லை |
வறம் கொல வீந்த கானத்து, குறும் பூங் |
||
கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப, |
||
வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம், |
||
மாலை அந்தி, மால் அதர் நண்ணிய |
||
5 |
பருவம் செய்த கருவி மா மழை! |
|
'அவர் நிலை அறியுமோ, ஈங்கு' என வருதல் |
||
சான்றோர்ப் புரைவதோ அன்றே; மான்று உடன் |
||
உர உரும் உரறும் நீரின், பரந்த |
||
பாம்பு பை மழுங்கல் அன்றியும், மாண்ட |
||
10 |
கனியா நெஞ்சத்தானும், |
|
இனிய அல்ல, நின் இடி நவில் குரலே. | உரை | |
தலைமகள் பருவம் கண்டு அழிந்தது.-கந்தரத்தனார்
|