முகப்பு |
வாரல் மென் தினைப் |
304. குறிஞ்சி |
வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்தி, |
||
சாரல் வரைய கிளைஉடன் குழீஇ, |
||
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும் |
||
நளி இருஞ் சிலம்பின் நல் மலை நாடன் |
||
5 |
புணரின், புணருமார் எழிலே; பிரியின், |
|
மணி மிடை பொன்னின் மாமை சாய, என் |
||
அணி நலம் சிதைக்குமார் பசலை; அதனால், |
||
அசுணம் கொல்பவர் கை போல், நன்றும், |
||
இன்பமும் துன்பமும் உடைத்தே, |
||
10 |
தண் கமழ் நறுந் தார் விறலோன் மார்பே. | உரை |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் மொழிந்தது.- மாறோக்கத்து நப்பசலையார்
|