முகப்பு |
வான் இகுபு சொரிந்த |
142. முல்லை |
வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற்கடை நாள், |
||
பாணி கொண்ட பல் கால் மெல் உறி |
||
ஞெலி கோல் கலப் பை அதளொடு சுருக்கி, |
||
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன் |
||
5 |
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப, |
|
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி |
||
சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும் |
||
புறவினதுவே-பொய்யா யாணர், |
||
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும், |
||
10 |
முல்லை சான்ற கற்பின், |
|
மெல் இயற் குறுமகள் உறைவின், ஊரே. | உரை | |
வினை முற்றி மீளும்தலைமகன், தேர்ப்பாகற்குச் சொல்லியது.-இடைக்காடனார்
|