முகப்பு |
விதையர் கொன்ற |
121. முல்லை |
விதையர் கொன்ற முதையல் பூழி, |
||
இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் |
||
கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை, |
||
அரலை அம் காட்டு இரலையொடு, வதியும் |
||
5 |
புறவிற்று அம்ம, நீ நயந்தோள் ஊரே: |
|
'எல்லி விட்டன்று, வேந்து' எனச் சொல்லுபு |
||
பரியல்; வாழ்க, நின் கண்ணி!-காண் வர |
||
விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலி மா |
||
வண் பரி தயங்க எழீஇ, தண் பெயற் |
||
10 |
கான் யாற்று இகுமணற் கரை பிறக்கு ஒழிய, |
|
எல் விருந்து அயரும் மனைவி |
||
மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே! | உரை | |
வினை முற்றி மறுத்தரும்தலைமகற்குத் தேர்ப்பாகன் சொல்லியது.-ஒரு சிறைப்பெரியனார்
|