முகப்பு |
விருந்து எவன் |
112. குறிஞ்சி |
விருந்து எவன்செய்கோ-தோழி!-சாரல் |
||
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கைச் |
||
சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு, |
||
உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் |
||
5 |
பெருங் கல் நாடன் வரவு அறிந்து, விரும்பி, |
|
மாக் கடல் முகந்து, மணி நிறத்து அருவித் |
||
தாழ் நீர் நனந் தலை அழுந்து படப் பாஅய், |
||
மலை இமைப்பது போல் மின்னி, |
||
சிலை வல் ஏற்றொடு செறிந்த இம் மழைக்கே? | உரை | |
பருவ வரவின்கண்ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறுத்தியது.-பெருங்குன்றூர் கிழார்
|