முகப்பு |
விரைப் பரி வருந்திய |
21. முல்லை |
விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர் |
||
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ, |
||
வேண்டு அமர் நடையர், மென்மெல வருக! |
||
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு |
||
5 |
ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்- |
|
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன |
||
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக் |
||
காமரு தகைய கானவாரணம் |
||
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் |
||
10 |
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, |
|
நாள் இரை கவர மாட்டி, தன் |
||
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே! | உரை | |
வினை முற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மருதன் இளநாகனார்
|