முகப்பு |
வில்லாப் பூவின் |
146. குறிஞ்சி |
வில்லாப் பூவின் கண்ணி சூடி, |
||
'நல் ஏமுறுவல்' என, பல் ஊர் திரிதரு |
||
நெடு மாப் பெண்ணை மடல் மானோயே!- |
||
கடன் அறி மன்னர் குடை நிழற் போலப் |
||
5 |
பெருந் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து, |
|
இருந்தனை சென்மோ-'வழங்குக சுடர்!' என, |
||
அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் |
||
நல்லேம் என்னும் கிளவி வல்லோன் |
||
எழுதி அன்ன காண் தகு வனப்பின் |
||
10 |
ஐயள், மாயோள், அணங்கிய |
|
மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே! | உரை | |
பின்னின்ற தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-கந்தரத்தனார்
|