முகப்பு |
விழவும் மூழ்த்தன்று |
320. மருதம் |
'விழவும் மூழ்த்தன்று; முழவும் தூங்கின்று; |
||
எவன் குறித்தனள்கொல்?' என்றி ஆயின்- |
||
தழை அணிந்து அலமரும் அல்குல், தெருவின், |
||
இளையோள் இறந்த அனைத்தற்கு, பழ விறல் |
||
5 |
ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில், |
|
காரி புக்க நேரார் புலம்போல், |
||
கல்லென்றன்றால், ஊரே; அதற்கொண்டு, |
||
காவல் செறிய மாட்டி, ஆய்தொடி |
||
எழில் மா மேனி மகளிர் |
||
10 |
விழுமாந்தனர், தம் கொழுநரைக் காத்தே. | உரை |
பரத்தை தனக்குப் பாங்காயினார் கேட்ப, நெருங்கிச் சொல்லியது.-கபிலர்
|