முகப்பு |
ஒன்று தெரிந்து |
103. பாலை |
ஒன்று தெரிந்து உரைத்திசின்-நெஞ்சே! புன் கால் |
||
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று, |
||
கடாஅம் செருக்கிய கடுஞ் சின முன்பின் |
||
களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்து, |
||
5 |
பால் அவி தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் |
|
பசி அட முடங்கிய பைங் கட் செந்நாய் |
||
மாயா வேட்டம் போகிய கணவன் |
||
பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் |
||
விருந்தின் வெங் காட்டு வருந்துதும் யாமே; |
||
10 |
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும், |
|
மீள்வாம் எனினும், நீ துணிந்ததுவே. | உரை | |
பொருள்வயிற்பிரிந்த தலைவன் இடைச்சுரத்து ஆற்றாதாகிய நெஞ்சினைக்கழறியது.-மருதன் இள நாகனார்
|