முகப்பு |
கடல்அம் காக்கைச் |
272. நெய்தல் |
கடல்அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல், |
||
படிவ மகளிர் கொடி கொய்து அழித்த |
||
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை, |
||
கடுஞ் சூல் வதிந்த காமர் பேடைக்கு, |
||
5 |
இருஞ் சேற்று அயிரை தேரிய, தெண் கழிப் |
|
பூஉடைக் குட்டம் துழவும் துறைவன் |
||
நல்காமையின், நசை பழுதாக, |
||
பெருங் கையற்ற என் சிறுமை, பலர் வாய் |
||
அம்பல் மூதூர் அலர்ந்து, |
||
10 |
நோய் ஆகின்று; அது நோயினும் பெரிதே. | உரை |
வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய தலைமகள் சொல்லியது; தோழி தலைமகளுக்குச் சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச் சொல்லியதூஉம் ஆம்.-முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
|