முகப்பு |
கடுஞ் சுறா எறிந்த |
392. நெய்தல் |
கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தை |
||
புள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென, |
||
மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர் |
||
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின் |
||
5 |
பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும், |
|
பெண்ணை வேலி, உழை கண் சீறூர் |
||
நல் மனை அறியின், நன்றுமன்தில்ல; |
||
செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த |
||
கானலொடு அழியுநர் போலாம்-பானாள், |
||
10 |
முனி படர் களையினும் களைப; |
|
நனி பேர் அன்பினர் காதலோரே. | உரை | |
இரவுக்குறி முகம்புக்கது; வரைவு நீட ஆற்றாளாய தலைமகளைத் தோழி வரைவு உணர்த்தி வற்புறுத்தியதூஉம் ஆம்.-மதுரை மருதன் இளநாகனார்
|