முகப்பு |
விளம்பழம் கமழும் |
12. பாலை |
விளம்பழம் கமழும் கமஞ்சூற்குழிசிப் |
||
பாசம் தின்ற தேய் கால் மத்தம் |
||
நெய் தெரி இயக்கம் வெளில்முதல் முழங்கும் |
||
வைகு புலர் விடியல் மெய் கரந்து, தன் கால் |
||
5 |
அரி அமை சிலம்பு கழீஇ, பல் மாண் |
|
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள், |
||
'இவை காண்தோறும் நோவர்மாதோ; |
||
அளியரோ அளியர் என் ஆயத்தோர்!' என |
||
நும்மொடு வரவு தான் அயரவும், |
||
10 |
தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே. | உரை |
தோழி உடன்போக்கு அஞ்சுவித்தது.- கயமனார்
|