முகப்பு |
விளையாடு ஆயமொடு ஓரை |
68. குறிஞ்சி |
'விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது, |
||
இளையோர் இல்லிடத்து இற்செறிந்திருத்தல் |
||
அறனும் அன்றே; ஆக்கமும் தேய்ம்' என- |
||
குறு நுரை சுமந்து, நறு மலர் உந்தி, |
||
5 |
பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம், |
|
வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே; |
||
'செல்க' என விடுநள்மன்கொல்லோ? எல் உமிழ்ந்து, |
||
உரவு உரும் உரறும் அரை இருள் நடு நாள், |
||
கொடி நுடங்கு இலங்கின மின்னி, |
||
10 |
ஆடு மழை இறுத்தன்று, அவர் கோடு உயர் குன்றே. | உரை |
சிறைப்புறமாகத்தோழி, தலைவிக்கு உரைப்பாளாய்ச் செறிப்பு அறிவுறீஇயது.-பிரான் சாத்தனார்
|