முகப்பு |
விளையாடு ஆயமொடு வெண் மணல் |
172. நெய்தல் |
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி, |
||
மறந்தனம் துறந்த காழ் முளை அகைய, |
||
'நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப; |
||
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகும்' என்று, |
||
5 |
அன்னை கூறினள், புன்னையது நலனே- |
|
அம்ம! நாணுதும், நும்மொடு நகையே; |
||
விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப, |
||
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த் |
||
துறை கெழு கொண்க!-நீ நல்கின், |
||
10 |
இறைபடு நீழல் பிறவுமார் உளவே. | உரை |
பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது; குறிபெயர்த்தீடும் ஆம்.
|