முகப்பு |
விறல் சால் விளங்கு |
208. பாலை |
விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி, |
||
அறல் போல் தெள் மணி இடை முலை நனைப்ப, |
||
விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து, |
||
எவன் இனைபு வாடுதி?-சுடர் நுதற் குறுமகள்!- |
||
5 |
செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும், |
|
நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர் |
||
கொன்னும் நம்புங் குரையர் தாமே; |
||
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்; |
||
பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள் |
||
10 |
முடியாதுஆயினும் வருவர்; அதன்தலை, |
|
இன் துணைப் பிரிந்தோர் நாடித் |
||
தருவது போலும், இப் பெரு மழைக் குரலே? | உரை | |
செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்ப,தோழி சொல்லியது.-நொச்சி நியமங் கிழார்
|