முகப்பு |
வெண் கோடு கொண்டு |
114. குறிஞ்சி |
வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும், |
||
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும், |
||
மறுகுதொறு புலாவும் சிறுகுடி அரவம் |
||
வைகிக் கேட்டுப் பையாந்திசினே; |
||
5 |
அளிதோ தானே-தோழி!-அல்கல் |
|
வந்தோன்மன்ற குன்ற நாடன்; |
||
துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை |
||
பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல்; |
||
ஈர்ங் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு |
||
10 |
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி, |
|
மையல் மடப் பிடி இனைய, |
||
கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே. | உரை | |
ஆறு பார்த்து உற்ற அச்சத்தால் தோழி தலைவிக்கு உரைப்பாளாய், சிறைப்புறமாகச் சொல்லியது.- தொல்கபிலர்
|