முகப்பு |
வேர் பிணி வெதிரத்துக் |
62. பாலை |
வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை |
||
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன |
||
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து, |
||
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து, |
||
5 |
உள்ளினென் அல்லெனோ யானே-'முள் எயிற்று, |
|
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல், |
||
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள், |
||
உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப |
||
உலவை ஆகிய மரத்த |
||
10 |
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது' எனவே? | உரை |
முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது.-இளங்கீரனார்
|