முகப்பு |
கண்டல வேலிக்... முண்டகம் |
207. நெய்தல் |
கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை |
||
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக் |
||
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென, |
||
நெடுந் தேர் பண்ணி வரல் ஆனாதே; |
||
5 |
குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி |
|
வந்தனர், பெயர்வர்கொல் தாமே? அல்கல், |
||
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ, |
||
கோட் சுறா எறிந்தென, சுருங்கிய நரம்பின் |
||
முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள், |
||
10 |
வலையும் தூண்டிலும் பற்றி, பெருங் கால் |
|
திரை எழு பௌவம் முன்னிய |
||
கொலை வெஞ் சிறாஅர் பாற்பட்டனளே. | உரை | |
நொதுமலர் வரைவுழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது.
|