முகப்பு |
கண்ணி கட்டிய |
200. மருதம் |
கண்ணி கட்டிய கதிர அன்ன |
||
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி, |
||
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில், |
||
'சாறு' என நுவலும் முது வாய்க் குயவ! |
||
5 |
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ- |
|
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப் |
||
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி, |
||
'கை கவர் நரம்பின் பனுவற் பாணன் |
||
செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று, |
||
10 |
ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன் |
|
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின்' எனவே. | உரை | |
தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, குயவனைக் கூவி, 'இங்ஙனம் சொல்லாயோ?' என்று குயவற்குச் சொல்லியது.-கூடலூர்ப் பல் கண்ணனார்
|