முகப்பு |
கண்ணும் தோளும்......பழ நலம் |
219. நெய்தல் |
கண்ணும் தோளும் தண் நறுங் கதுப்பும் |
||
பழ நலம் இழந்து பசலை பாய, |
||
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும், என்னதூஉம் |
||
புலவேன் வாழி-தோழி!-சிறு கால் |
||
5 |
அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல் |
|
பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர் |
||
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர் |
||
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும் |
||
கானல்அம் பெருந் துறைச் சேர்ப்பன்- |
||
10 |
தானே யானே புணர்ந்தமாறே. | உரை |
வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.-தாயங்கண்ணனார்
|