முகப்பு |
கல்லாக் கடுவன் |
233. குறிஞ்சி |
கல்லாக் கடுவன் நடுங்க, முள் எயிற்று |
||
மட மா மந்தி மாணா வன் பறழ், |
||
கோடு உயர் அடுக்கத்து, ஆடு மழை ஒளிக்கும் |
||
பெருங் கல் நாடனை அருளினை ஆயின், |
||
5 |
இனி என கொள்ளலைமன்னே; கொன் ஒன்று |
|
கூறுவென் வாழி-தோழி!-முன்னுற |
||
நாருடை நெஞ்சத்து ஈரம் பொத்தி, |
||
ஆன்றோர் செல் நெறி வழாஅச் |
||
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே. | உரை | |
வரையாது நெடுங்காலம் வந்து ஒழுக, இவள் ஆற்றாள் என்பது உணர்ந்து, சிறைப் புறமாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.-அஞ்சில் ஆந்தையார்
|