முகப்பு |
கவி தலை எண்கின் |
325. பாலை |
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை |
||
இரை தேர் வேட்கையின் இரவில் போகி, |
||
நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த |
||
அர வாழ் புற்றம் ஒழிய, ஒய்யென |
||
5 |
முர வாய் வள் உகிர் இடப்ப வாங்கும், |
|
ஊக்கு அருங் கவலை நீந்தி, மற்று-இவள் |
||
பூப்போல் உண்கண் புது நலம் சிதைய, |
||
வீங்கு நீர் வாரக் கண்டும், |
||
தகுமோ?-பெரும!-தவிர்க நும் செலவே. | உரை | |
தோழி செலவு அழுங்குவித்தது.-மதுரைக் காருலவியங் கூத்தனார்
|