முகப்பு |
கழுது கால் கிளர |
255. குறிஞ்சி |
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே; |
||
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி, |
||
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்; |
||
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை |
||
5 |
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!- |
|
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர் |
||
வாரார்ஆயினோ நன்றுமன்தில்ல- |
||
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப் |
||
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள், |
||
10 |
திருமணி அரவுத் தேர்ந்து உழல, |
|
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே! | உரை | |
ஆறு பார்த்து உற்றது.-ஆலம்பேரி சாத்தனார்
|