முகப்பு |
கழுநீர் மேய்ந்த |
260. மருதம் |
கழுநீர் மேய்ந்த கருந் தாள் எருமை |
||
பழனத் தாமரைப் பனிமலர் முணைஇ, |
||
தண்டு சேர் மள்ளரின் இயலி, அயலது |
||
குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர! |
||
5 |
வெய்யை போல முயங்குதி: முனை எழத் |
|
தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன் |
||
மலி புனல் வாயில் இருப்பை அன்ன, என் |
||
ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த |
||
முகை அவிழ் கோதை வாட்டிய |
||
10 |
பகைவன்மன்? யான் மறந்து அமைகலனே! | உரை |
ஊடல் மறுத்த தலைமகள் சொல்லியது.-பரணர்
|