முகப்பு |
கற்றை ஈந்தின் |
174. பாலை |
'கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன |
||
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக் |
||
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின், |
||
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் |
||
5 |
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி, |
|
பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து |
||
உயங்கினை, மடந்தை!' என்றி-தோழி!- |
||
அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே; |
||
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி |
||
10 |
மல்லல் மார்பு மடுத்தனன் |
|
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே? | உரை | |
வினை முற்றி வந்து எய்திய காலத்து, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது.
|