முகப்பு |
கானமும் கம்மென்றன்றே |
154. குறிஞ்சி |
கானமும் கம்மென்றன்றே; வானமும் |
||
வரை கிழிப்பன்ன மை இருள் பரப்பி, |
||
பல் குரல் எழிலி பாடு ஓவாதே; |
||
மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த |
||
5 |
வெஞ் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை |
|
அஞ்சுதக உரறும்; ஓசை கேளாது |
||
துஞ்சுதியோ-இல, தூவிலாட்டி!- |
||
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம் |
||
நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர் |
||
10 |
வாரார் ஆயினோ நன்றே; சாரல் |
|
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளுதொறும், |
||
நிலம் பரந்து ஒழுகும், என் நிறை இல் நெஞ்சே? | உரை | |
இரவுக்குறித் தலைவன்சிறைப்புறமாக வரைவு கடாயது.- நல்லாவூர் கிழார்
|