முகப்பு |
கானல் அம் சிறு குடிக் |
4. நெய்தல் |
கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர் |
||
நீல் நிற புன்னைக் கொழு நிழல் அசைஇ, |
||
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி, |
||
அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு, |
||
5 |
'அலரே அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை |
|
அரிய ஆகும் நமக்கு' எனக் கூறின், |
||
கொண்டும் செல்வர்கொல்-தோழி!-உமணர் |
||
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி, |
||
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம் |
||
10 |
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக் |
|
கருங் கால் வெண் குருகு வெரூஉம் |
||
இருங் கழிச் சேர்ப்பின் தம் உறைவின் ஊர்க்கே? | உரை | |
தலைவன் சிறைப்புறத்தானாக, தோழி அலர் அச்சம் தோன்றச் சொல்லி வரைவு கடாயது.-அம்மூவனார்
|