முகப்பு |
கானல் மாலைக் |
382. நெய்தல் |
கானல் மாலைக் கழி நீர் மல்க, |
||
நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த, |
||
ஆனாது அலைக்கும் கடலே; மீன் அருந்தி, |
||
புள்ளினம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் |
||
5 |
துறந்தோர் தேஎத்து இருந்து, நனி வருந்தி, |
|
ஆர் உயிர் அழிவதுஆயினும்-நேரிழை!- |
||
கரத்தல் வேண்டுமால் மற்றே, பரப்பு நீர்த் |
||
தண்ணம் துறைவன் நாண, |
||
நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே. | உரை | |
ஒருவழித் தணந்த காலத்துப் பொழுதுபட ஆற்றாளாகி நின்ற தலைமகளைத் தோழி ஆற்றுவிக்கல்லாள் ஆயினாட்குத் தலைமகள் சொல்லியது.- நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார
|