முகப்பு |
குண கடல் முகந்து.....தண் கார் |
346. பாலை |
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி, |
||
தண் கார் தலைஇய நிலம் தணி காலை, |
||
அரசு பகை நுவலும் அரு முனை இயவின், |
||
அழிந்த வேலி அம் குடிச் சீறூர் |
||
5 |
ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட, |
|
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை, |
||
இன்று, நக்கனைமன் போலா-என்றும் |
||
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் |
||
பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக் |
||
10 |
கடி பதம் கமழும் கூந்தல் |
|
மட மா அரிவை தட மென் தோளே? | உரை | |
பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்
|