முகப்பு |
குண கடல் முகந்து....மண் திணி |
153. பாலை |
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி, |
||
மண் திணி ஞாலம் விளங்க, கம்மியர் |
||
செம்பு சொரி பானையின் மின்னி, எவ் வாயும் |
||
தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி |
||
5 |
தென்புல மருங்கில் சென்று அற்றாங்கு, |
|
நெஞ்சம் அவர்வயின் சென்றென, ஈண்டு ஒழிந்து, |
||
உண்டல் அளித்து என் உடம்பே-விறல் போர் |
||
வெஞ் சின வேந்தன் பகை அலைக் கலங்கி, |
||
வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் |
||
10 |
பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே. | உரை |
பிரிவிடை மெலிந்த தலைவி சொல்லியது.-தனிமகனார்
|