முகப்பு |
குரும்பை மணிப் |
269. பாலை |
குரும்பை மணிப் பூண் பெருஞ் செங் கிண்கிணிப் |
||
பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூட் புதல்வன், |
||
மாலைக் கட்டில், மார்பு ஊர்பு இழிய, |
||
அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைச் |
||
5 |
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெங் காதலி |
|
திருமுகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும், |
||
பெரும! வள்ளியின் பிணிக்கும் என்னார், |
||
சிறு பல் குன்றம் இறப்போர்; |
||
அறிவார் யார், அவர் முன்னியவ்வே? | உரை | |
தோழி வாயில் மறுத்தது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.- எயினந்தை மகன் இளங்கீரனார்.
|