முகப்பு |
கொடியை வாழி |
277. பாலை |
கொடியை; வாழி-தும்பி!- இந் நோய் |
||
படுகதில் அம்ம, யான் நினக்கு உரைத்தென; |
||
மெய்யே கருமை அன்றியும், செவ்வன் |
||
அறிவும் கரிதோ-அறனிலோய்!-நினக்கே? |
||
5 |
மனை உறக் காக்கும் மாண் பெருங் கிடக்கை |
|
நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய |
||
தாறு படு பீரம் ஊதி, வேறுபட |
||
நாற்றம் இன்மையின், பசலை ஊதாய்: |
||
சிறு குறும் பறவைக்கு ஓடி, விரைவுடன் |
||
10 |
நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ? அன்பு இலர், |
|
வெம் மலை அருஞ் சுரம் இறந்தோர்க்கு |
||
என் நிலை உரையாய், சென்று, அவண் வரவே. | உரை | |
பட்ட பின்றை வரையாது, கிழவோன் நெட்டிடைக் கழிந்து பொருள்வயிற் பிரிய,ஆற்றளாகிய தலைமகள் தும்பிக்குச் சொல்லியது.-தும்பி சேர் கீரனார்
|