முகப்பு |
கொல்லைக் கோவலர் |
266. முல்லை |
கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த |
||
குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ |
||
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும் |
||
அகலுள் ஆங்கண் சீறூரேமே; |
||
5 |
அதுவே சாலும் காமம்; அன்றியும், |
|
எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்று |
||
கூறுவல்-வாழியர், ஐய!-வேறுபட்டு |
||
இரீஇய காலை இரியின், |
||
பெரிய அல்லவோ, பெரியவர் நிலையே? | உரை | |
தலைமகனைச் செலவுடன்பட்டது; கடிநகர் வரைப்பில் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் தோழி 'நும்மாலே ஆயிற்று' என்று சொல்லியதூஉம் ஆம்.-கச்சிப்பேட்டு இளந்தச்சனார்
|