முகப்பு |
சிறை நாள் ஈங்கை |
79. பாலை |
'சிறை நாள் ஈங்கை உறை நனி திரள்வீ, |
||
கூரை நல் மனைக் குறுந் தொடி மகளிர் |
||
மணல் ஆடு கழங்கின், அறை மிசைத் தாஅம் |
||
ஏர் தரலுற்ற இயக்கு அருங் கவலைப் |
||
5 |
பிரிந்தோர் வந்து, நப்புணரப் புணர்ந்தோர் |
|
பிரிதல் சூழ்தலின், அரியதும் உண்டோ?' |
||
என்று நாம் கூறிக் காமம் செப்புதும்; |
||
செப்பாது விடினே, உயிரொடும் வந்தன்று- |
||
அம்ம! வாழி, தோழி!- |
||
10 |
யாதனின் தவிர்க்குவம், காதலர் செலவே? | உரை |
பிரிவு உணர்ந்து வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.-கண்ணகனார்
|