முகப்பு |
செல விரைவுற்ற |
308. பாலை |
செல விரைவுற்ற அரவம் போற்றி, |
||
மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை- |
||
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள், |
||
வேண்டாமையின் மென்மெல வந்து, |
||
5 |
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி, |
|
வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப் |
||
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து, |
||
ஆகம் அடைதந்தோளே: அது கண்டு, |
||
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம் |
||
10 |
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம் |
|
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே. | உரை | |
நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி ஆற்றானாய், நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்
|