முகப்பு |
சேறும் சேறும் |
229. பாலை |
'சேறும், சேறும்' என்றலின், பல புலந்து, |
||
'சென்மின்' என்றல் யான் அஞ்சுவலே; |
||
'செல்லாதீம்' எனச் செப்பின், பல்லோர் |
||
நிறத்து எறி புன் சொலின்திறத்து அஞ்சுவலே; |
||
5 |
அதனால், சென்மின்; சென்று வினை முடிமின்; சென்றாங்கு, |
|
அவண் நீடாதல் ஓம்புமின்; யாமத்து, |
||
இழை அணி ஆகம் வடுக் கொள முயங்கி, |
||
உழையீராகவும் பனிப்போள் தமியே |
||
குழைவான், கண்ணிடத்து ஈண்டித் தண்ணென, |
||
10 |
ஆடிய இள மழைப் பின்றை, |
|
வாடையும் கண்டிரோ, வந்து நின்றதுவே? | உரை | |
தலைமகனால் பிரிவு உணர்த்தப்பட்ட தோழி, தலைமகளை ஆற்றுவித்துச் செல்ல உடன்பட்டது; செலவு அழுங்குவித்ததூஉம் ஆம்.
|