முகப்பு |
சொல்லிய பருவம் |
364. முல்லை |
சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும் |
||
மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி, |
||
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க, |
||
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப, |
||
5 |
இன்ன சில் நாள் கழியின், பல் நாள் |
|
வாழலென் வாழி-தோழி!-ஊழின் |
||
உரும் இசை அறியாச் சிறு செந் நாவின் |
||
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப, |
||
பல் ஆ தந்த கல்லாக் கோவலர் |
||
10 |
கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப, |
|
உயிர் செலத் துனைதரும் மாலை, |
||
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே. | உரை | |
தலைமகள் பிரிவிடை மெலிந்தது.-கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார்
|