முகப்பு |
சொல்லின் சொல் எதிர் |
39. குறிஞ்சி |
சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின் |
||
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென; |
||
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ? |
||
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப் |
||
5 |
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் |
|
தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின் |
||
கண்ணே கதவ? அல்ல; நண்ணார் |
||
அரண் தலை மதிலராகவும், முரசு கொண்டு, |
||
ஓம்பு அரண் கடந்த அடு போர்ச் செழியன் |
||
10 |
பெரும் பெயர்க் கூடல் அன்ன நின் |
|
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே. | உரை | |
இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது.-மருதன் இளநாகனார்
|