முகப்பு |
ஞான்ற ஞாயிறு |
239. நெய்தல் |
ஞான்ற ஞாயிறு குடமலை மறைய, |
||
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் |
||
இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி, |
||
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் |
||
5 |
காமர் சிறுகுடிச் செல்நெறி வழியின், |
|
ஆய் மணி பொதி அவிழ்ந்தாங்கு, நெய்தல் |
||
புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும் |
||
மல்லல் இருங் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு |
||
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே; 'முன்கை |
||
10 |
வார் கோல் எல் வளை உடைய வாங்கி, |
|
முயங்கு' எனக் கலுழ்ந்த இவ் ஊர் |
||
எற்று ஆவதுகொல், யாம் மற்றொன்று செயினே? | உரை | |
தோழி, தலைமகன் சிறைப்புறமாகச் சொல்லியது.-குன்றியனார்
|