முகப்பு |
தடங் கோட்டு ஆமான் |
57. குறிஞ்சி |
தடங்கோட்டு ஆமான், மடங்கல் மா நிரைக் |
||
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தென, |
||
துஞ்சு பதம் பெற்ற துய்த் தலை மந்தி |
||
கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி, |
||
5 |
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி, தீம் பால் |
|
கல்லா வன் பறழ்க் கைந் நிறை பிழியும் |
||
மா மலை நாட! மருட்கை உடைத்தே- |
||
செங் கோல், கொடுங் குரல், சிறு தினை வியன் புனம் |
||
கொய் பதம் குறுகும்காலை, எம் |
||
10 |
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே! | உரை |
செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாயது.-பொதும்பில் கிழார்
|