முகப்பு |
தடந் தாள் தாழைக் |
270. நெய்தல் |
தடந் தாள் தாழைக் குடம்பை, நோனாத் |
||
தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து |
||
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி, |
||
உருள் பொறி போல எம் முனை வருதல், |
||
5 |
அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப் |
|
பெருந் தோட் செல்வத்து இவளினும்-எல்லா!- |
||
எற் பெரிது அளித்தனை, நீயே; பொற்புடை |
||
விரி உளைப் பொலிந்த பரியுடை நன் மான் |
||
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் |
||
10 |
கூந்தல் முரற்சியின் கொடிதே; |
|
மறப்பல் மாதோ, நின் விறல் தகைமையே. | உரை | |
தோழி வாயில் நேர்கின்றாள் தலைமகனை நெருங்கிச் சொல்லி, வாயில் எதிர்கொண்டது,உடனிலைக் கிளவி வகையால்.-பரணர்
|