முகப்பு |
தட மருப்பு எருமை மட நடைக் |
120. மருதம் |
தட மருப்பு எருமை மட நடைக் குழவி |
||
தூண் தொறும் யாத்த காண்தகு நல் இல், |
||
கொடுங் குழை பெய்த செழுஞ் செய் பேதை |
||
சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப, |
||
5 |
வாளை ஈர்ந் தடி வல்லிதின் வகைஇ, |
|
புகை உண்டு அமர்த்த கண்ணள், தகை பெறப் |
||
பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர் |
||
அம் துகில் தலையில் துடையினள், நப் புலந்து, |
||
அட்டிலோளே அம் மா அரிவை- |
||
10 |
எமக்கே வருகதில் விருந்தே! சிவப்பாள் அன்று, |
|
சிறு முள் எயிறு தோன்ற |
||
முறுவல் கொண்ட முகம் காண்கம்மே. | உரை | |
விருந்து வாயிலாகப்புக்க தலைவன் சொல்லியது.-மாங்குடி கிழார்
|