முகப்பு |
தளிர் சேர் தண் |
204. குறிஞ்சி |
'தளிர் சேர் தண் தழை தைஇ, நுந்தை |
||
குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ? |
||
குறுஞ் சுனைக் குவளை அடைச்சி, நாம் புணரிய |
||
நறுந் தண் சாரல் ஆடுகம் வருகோ? |
||
5 |
இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் |
|
கூறு இனி; மடந்தை! நின் கூர் எயிறு உண்கு' என, |
||
யான் தன் மொழிதலின், மொழி எதிர் வந்து, |
||
தான் செய் குறி நிலை இனிய கூறி, |
||
ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு, |
||
10 |
உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் |
|
கொடிச்சி செல்புறம் நோக்கி, |
||
விடுத்த நெஞ்சம்! விடல் ஒல்லாதே? | உரை | |
பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-மள்ளனார்
|