முகப்பு |
தினை உண் கேழல் |
119. குறிஞ்சி |
தினை உண் கேழல் இரிய, புனவன் |
||
சிறு பொறி மாட்டிய பெருங் கல் அடாஅர், |
||
ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன் |
||
ஆர் தர வந்தனன் ஆயினும், படப்பை |
||
5 |
இன் முசுப் பெருங் கலை நன் மேயல் ஆரும் |
|
பல் மலர்க் கான் யாற்று உம்பர், கருங் கலை |
||
கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும் |
||
பெரு வரை நீழல் வருகுவன், குளவியொடு |
||
கூதளம் ததைந்த கண்ணியன்; யாவதும் |
||
10 |
முயங்கல் பெறுகுவன் அல்லன்; |
|
புலவி கொளீஇயர், தன் மலையினும் பெரிதே. | உரை | |
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-பெருங்குன்றூர்கிழார்
|