முகப்பு |
தீமை கண்டோர் |
116. குறிஞ்சி |
'தீமை கண்டோர் திறத்தும்பெரியோர் |
||
தாம் அறிந்து உணர்க' என்பமாதோ; |
||
வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று, |
||
இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை, |
||
5 |
சூல் முதிர் மடப் பிடி, நாள் மேயல் ஆரும் |
|
மலை கெழு நாடன் கேண்மை, பலவின் |
||
மாச் சினை துறந்த கோள் முதிர் பெரும் பழம் |
||
விடர் அளை வீழ்ந்து உக்காஅங்கு, தொடர்பு அறச் |
||
சேணும் சென்று உக்கன்றே அறியாது |
||
10 |
ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த |
|
குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர் |
||
இன்னும் ஓவார், என் திறத்து அலரே! | உரை | |
வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவி தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது.-கந்தரத்தனார்
|