முகப்பு |
துகில் விரித்தன்ன |
43. பாலை |
துகில் விரித்தன்ன வெயில் அவிர்உருப்பின் |
||
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன், |
||
ஓய்பசிச் செந்நாய் உயங்குமரை தொலைச்சி |
||
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு |
||
5 |
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் |
|
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே |
||
மெய்ம் மலி உவகை ஆகின்று; இவட்கே, |
||
அஞ்சல் என்ற இறை கைவிட்டென, |
||
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின், |
||
10 |
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில் |
|
ஓர் எயின் மன்னன் போல, |
||
அழிவு வந்தன்றால், ஒழிதல் கேட்டே. | உரை | |
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவனைச் செலவு அழுங்குவித்தது.-எயினந்தையார்
|