முகப்பு |
தூங்கல் ஓலை |
135. நெய்தல் |
தூங்கல் ஓலை ஓங்கு மடற் பெண்ணை |
||
மா அரை புதைத்த மணல் மலி முன்றில், |
||
வரையாத் தாரம் வரு விருந்து அயரும் |
||
தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர் |
||
5 |
இனிது மன்றம்ம தானே-பனி படு |
|
பல் சுரம் உழந்த நல்கூர் பரிய, |
||
முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும், |
||
வால் உளைப் பொலிந்த, புரவித் |
||
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே. |
உரை | |
'வரைவு நீட்டிப்ப அலர்ஆம்' எனக் கவன்ற தோழி சிறைப்புறமாகச்சொல்லியது.-கதப்பிள்ளையார்
|