முகப்பு |
தேம் படு சிலம்பல் |
243. பாலை |
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய |
||
துறுகல் அயல தூ மணல் அடைகரை, |
||
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப் |
||
பொதும்புதோறு அல்கும் பூங் கண் இருங் குயில், |
||
5 |
'கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு |
|
அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!' என, |
||
கையறத் துறப்போர்க் கழறுவ போல, |
||
மெய் உற இருந்து மேவர நுவல, |
||
இன்னாது ஆகிய காலை, பொருள்வயிற் |
||
10 |
பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின், |
|
அரிது மன்றம்ம, அறத்தினும் பொருளே? | உரை | |
பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.-காமக்கணிப் பசலையார்
|